அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தாலும், என் குழந்தைகளை நான் கற்று வளர்ந்த தமிழ்ப் பண்பாடு, பாரம்பரியம், நல்லொழுக்கத்தோடு வளர்க்கவேண்டும் என விரும்பினேன், அதன் முதல்படியாகவே அவர்களுக்குத் தமிழ் கல்வி பயில்விக்கிறேன்.
‘சுயநலத்திலும் ஒரு பொதுநலம்’ என்பதுபோல் நான் சங்கமம் தமிழ்ப்பள்ளி ஆர்வலராக 2014ம் ஆண்டு முதல் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். பள்ளியில் தொடர்ந்து ஆர்வலராக, ஆசிரியராக, செயற்குழு உறுப்பினராக, விழா அமைப்பாளராக பங்குகொண்டு சங்கமம் குடும்பத்தோடு இணைந்து பணியாற்றிவருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிக்கிறது. வரும்காலங்களிலும் பள்ளியின் வளர்ச்சிக்கு என்னாலான உதவிககளை தொடர்ந்து செய்ய முற்படுவேன்.
குழந்தைகள் நம் தாய் மொழி கற்க உதவுவோம், நம் தமிழ்ப் பண்பாட்டோடு வளர்ப்போம் !